தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலானது -ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்.!

தமிழகம்

தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலானது -ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்.!

தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலானது -ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்.!

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள்ளது. போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ.500, 2-வது முறை 1,500 அபராதம் வசூலிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

வாகனங்கள் பெருக்கத்தால் நாளுக்கு நாள் சாலைகளில் போக்குவரத்து நேரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் விபத்தால் விலைமதிப்பற்ற மனித உயிரிகளை இந்த உலகம் இழந்து வருகின்றது. போக்குவரத்து நேரிசலால் ஏற்படும் விபத்தை காட்டிலும் குடிபோதையில் இயக்கப்படும் வாகனங்களால் தான் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றது.

இதனை கட்டுப்படுத்தும் விதாமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் விபத்தில் ஏற்படும் மரணங்களை குறைப்பதில் ஆம்புலன்ஸ் சேவை முக்கிய பங்கு வகுக்கிறது.

இத்தகைய ஆம்புலன்ஸ் சேவையை விரைவுப்படுத்த பல நடவடிக்கைள் எடுக்கப்படுட்டு வருகின்றனர். இந்த நிலையில், சாலைகளில் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்லும் போது வழிவிடாமல் செல்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ.500, 2-வது முறை 1,500 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...