கடந்த 8 ஆண்டுகளில், பாதுகாப்பு தளவாட பொருட்கள் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரிப்பு – பிரதமர் மோடி

இந்தியா

கடந்த 8 ஆண்டுகளில், பாதுகாப்பு தளவாட பொருட்கள் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரிப்பு – பிரதமர் மோடி

கடந்த 8 ஆண்டுகளில், பாதுகாப்பு தளவாட பொருட்கள் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரிப்பு – பிரதமர்  மோடி

இந்தியாவில், கடந்த 8 ஆண்டுகளில், பாதுகாப்பு தளவாட பொருட்கள் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் பாதுகாப்புத்துறை சார்ந்த கண்காட்சியை துவக்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு விமான படை தளத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பிரதமர் மோடி உரையாற்றியதாவது: ‘அம்ரீத் கால்’ (இந்தியா 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் இருந்து 100வது ஆண்டிற்கு செல்வதற்கான நல்ல காலம்) கட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, புதிய இந்தியாவை பெரிய அளவில் இந்த பாதுகாப்பு கண்காட்சி எடுத்து காட்டுகிறது. இதில், நாட்டின் வளர்ச்சி, மாநிலங்களின் பங்களிப்பு, இளைஞர்களின் சக்தி, அவர்களின் கனவு,, தைரியம் மற்றும் திறமை அடங்கியிருக்கும். முன்பும் பாதுகாப்பு கண்காட்சி நடந்துள்ளது.

ஆனால், தற்போதைய கண்காட்சியானது கணிக்க முடியாத வகையில் அமைந்துள்ளது. இது புதிய இந்தியாவின் துவக்கமாக அமைந்துள்ளது. இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்ற கண்காட்சியாகவும், அதில், இந்தியாவில் மட்டும் தயாரான தளவாடங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. இதுவரை நடந்த நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சியானது, புதிய எதிர்காலத்திற்கான உறுதியான துவக்கத்தை குறித்துள்ளது. இது சில நாடுகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை நாம் அறிவோம். ஆனால், பல நாடுகள் நேர்மறையான எண்ணத்துடன் எங்களுடன் வந்துள்ளன. எதிர்காலத்திற்காக இந்த வாய்ப்புகளுக்கு இந்தியா வடிவம் கொடுக்கும் போது, இந்தியாவின் நண்பர்களான 53 ஆப்ரிக்க நாடுகள் எங்களுடன் தோளோடு தோன் நின்று நிற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சர்வதேச பாதுகாப்பிற்கும், இலவச வர்த்தகத்திற்கும், கடலோர பாதுகாப்பானது அனைத்து உலக நாடுகளுக்கும் முக்கியமானதாக மாறியுள்ளது.இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமையும் தீசா விமான படை நிலையம், நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியமான மையமாக இருக்கும். பாதுகாப்பு துறையில், நோக்கம், புதிய கண்டுபிடிப்பு, அதனை அமல்படுத்துதல் என்ற புதிய கொள்கையில் புதிய இந்தியா பயணித்து வருகிறது. சர்வதேச விநியோக சங்கிலியில், இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில், பாதுகாப்பு தளவாட பொருட்கள் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து 101 பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து அந்த பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடும். அதனுடன் 411 பாதுகாப்பு சார்ந்த பொருட்கள் இந்தியாவிலேயே கொள்முதல் செய்யப்படும். நாடு வெகுதூரம் சென்றுவிட்டது. முன்பு புறாக்களை விடுவித்த நாம், தற்போது சிறுத்தைகளை விடுவிக்கிறோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave your comments here...