தமிழகத்தில் அப்பா, மகன், மருமகன் என குடும்ப அரசியல் செய்கின்றனர் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு..!

அரசியல்

தமிழகத்தில் அப்பா, மகன், மருமகன் என குடும்ப அரசியல் செய்கின்றனர் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு..!

தமிழகத்தில் அப்பா,  மகன், மருமகன் என குடும்ப அரசியல் செய்கின்றனர் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு..!

தமிழகத்தில் அப்பா, மகன், மருமகன் என குடும்ப அரசியல் செய்கின்றனர். எனவே வளர்ச்சியடைவது சிரமமாக உள்ளது. பிரதமரை கண்டு திமுகவினர் அஞ்சுகின்றனர் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.


சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் , செல்வ மகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட 7 நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தொழில் மற்றும் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக மக்கள் பிரதமர் மீது பெரியளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். நீங்கள் பிரதமரின் தூதர்களாக இருக்கின்றீர்கள். 8 ஆண்டு சேவையால் பிரதமர் இந்த நம்பிக்கையை மக்களிடம் பெற்றுள்ளார். கரீப் கல்யாண் திட்டங்கள் உள்ளிட்டவை ஏழை மக்களுக்கு உதவியுள்ளது. பிரதமர் வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்து வருகிறார். முன்னேறிய, வளர்ச்சியடைந்த, நேர்மையான தமிழகமாக மாற வேண்டும் என பிரதமர் எதிர்பார்க்கிறார். ஊழலே இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பது பிரதமரின் நோக்கம். ஊழலற்ற தமிழகம் உருவாக வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.

தற்போதைய தமிழக அரசால் ஊழலற்ற ஆட்சியை தரமுடியாது. தமிழகத்தில் அப்பா, மகன், மருமகன் என குடும்ப அரசியல் செய்கின்றனர். எனவே வளர்ச்சியடைவது சிரமமாக உள்ளது. பிரதமரை கண்டு திமுகவினர் அஞ்சுகின்றனர். பிரதமரின் படத்தை கூட மத்திய அரசின் திட்டங்களில் இடம்பெறவைக்க பயப்படுகின்றனர். மத்திய அரசின் திட்டங்களில் தனது படத்தை பயன்படுத்துகிறார் தமிழக முதலமைச்சர். அனைத்து தரப்பு மக்களையும் பிரதமர் 8 ஆண்டில் தொடர்பு கொண்டுள்ளார். 24 மணிநேரமும் இந்திய மக்களுக்காக உழைக்கிறார். கொரானா காலத்தில் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் மாதம் தோறும் வழங்கப்பட்டது. இதற்காக ரூ.4 லட்சம் கோடி செலவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், 17.10.22 ல் பிரதமர் மூலம் விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தில் பணம் விடுவிக்கப்பட்டு உள்ளது. 2 லட்சம் கோடி இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இலவச எரிவாயு, அனைவருக்கும் மின்சாரம் கொடுத்து, அனைத்து வீடுகளுக்கும் கழிவறை அமைத்து கொடுத்துள்ளார். குடிநீரும் அனைத்து வீடுகளுக்கும் தரப்பட உள்ளது.

இந்தியா முழுவதும் 3 கோடி இலவச வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களை முறையாக கேட்டுப் பெற்று , தமிழகத்தில் அமல்படுத்தவில்லை. மத்திய அரசு திட்டங்களால் தங்களது ஆட்சிக்கு பாதிப்பு வருமோ என அஞ்சுகின்றனர். எனவே தமிழக பாஜகவினர், அண்ணாமலை வழிகாட்டுதல்படி திட்டங்களை பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்தில் மாநில அரசு செய்ய வேண்டிய பணியை அண்ணாமலை திறம்பட செய்து வருவதாக கூறினார்.

மாநில அரசும், அரசு அதிகாரிகளும் செய்ய வேண்டிய பணியை பாஜகவினர் செய்து வருகின்றனர். மத்திய அரசு தரமான அரசியை வழங்குகிறது. ஆனால் தரமற்ற அரிசியை மாநில அரசு ரேசன் கடைகளில் விநியோகிக்கிறது. தமிழக அமைச்சர்கள் தரம் குறைந்த வார்த்தையால் பிரதமரை பேசுகின்றனர். பிரதமர் அரசியல் கட்சி தலைவர் அல்ல. இந்திய நாட்டின் பிரதிநிதி. திமுக தலைவர்களை அண்ணாமலை ஒருபோதும் தரம் குறைந்த வார்த்தைகளை பேசுவதில்லை. மக்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பாஜகவினர் உழைக்க வேண்டும் என்று கூறினார்.

ஆகஸ்ட் 15 ல் 5 உறுதிமொழிகளை எடுக்க சொன்னார் பிரதமர் , இந்தியா முன்னேறிய நாடாக மாறுவது, ஆங்கிலேயே, முகலாய காலனிய எண்ணங்களில் இருந்து விடுபடுவது, நமது பாரம்பரிய கலாசார வேர்களை கண்டறிய வேண்டும் , வறுமையை ஒழிக்க ஒன்றுபட்டு போராட வேண்டும் , காஷ்மீர் முதல் குமரி வரையுள்ள 130 கோடி இந்தியர்களும் ஒன்றுபட வேண்டும், அப்படி நடந்நால் 130 கோடி அடிகள் இந்தியா முன்னோக்கி அடி வைப்பது போலாகும். இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. விரைவில் தமிழகத்தில் தாமரை மலரும், பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். சேறு, சகதியில் தாமரை மலரும், தாமரை மூலம் வளர்ச்சி கிடைக்கும் என கூறினார்.

Leave your comments here...