ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸ்- மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு..!

இந்தியா

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸ்- மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு..!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸ்- மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு..!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்.

மக்கள் மத்தியில் முக்கியமான பண்டிகையான தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் விமர்சையாக வருடாவருடம் கொண்டாடப்படும். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பின் அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11,27,000 ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். போனஸ் வழங்குவதன் காரணமாக ரயில்வேக்கு ரூ.1,732 கோடி செலவாகும் என அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். அதிகபட்சமாக ஒரு ரயில்வே ஊழியருக்கு ரூ.17,951 போனஸாக கிடைக்கும். மத்திய அரசின் இத்தகைய அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2021ம் ஆண்டிலும் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...