தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்எல்ஏவுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்..!

அரசியல்

தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்எல்ஏவுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்..!

தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்எல்ஏவுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்..!

தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று பணியாற்றும் ஊழியர்களிடம் அவர் திடீரென மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஊழியர்களை அவர் தகாத வார்த்தையில் பேசியதோடு, கை கால்களை உடைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

திமுக எம்எல்ஏவின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த செயலை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அரசு அதிகாரிகளை மிரட்டுவது, காவல் துறையினரை மிரட்டுவது, ஒப்பந்ததாரர்களை மிரட்டுவது, அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடுகளில் தலையிடுவது என்ற வரிசையில் தற்போது காவல் துறைக்குள்ள அதிகாரத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் பயன்படுத்தியிருப்பதை பார்க்கும்போது தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதும், ஆளும் கட்சியினரின் அராஜகம் கொடிகட்டி பறக்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த மெல்ரோசபுரம் பகுதியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம், தனியாருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக வணிகம் செய்து வருவதாகவும், குத்தகை காலம் முடிவடையாத சூழ்நிலையில் இடத்தை காலி செய்து தர முடியாது என்று தனியார் நிறுவனம் தெரிவித்து விட்டதாகவும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனியார் நிறுவன அதிகாரியை தொலைபேசியில் அழைத்து இடத்தை காலி செய்யுமாறு திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மிரட்டும் தொனியில் கேட்டுக்கொண்டதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல் சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு வழி வகுக்கம். திமுக எம்எல்ஏவின் இந்த செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Leave your comments here...