ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் : விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை – உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி.!

தமிழகம்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் : விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை – உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி.!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் : விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை – உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி.!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 2018-ல் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும், இறந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீட்டு தொகையை அதிகப்படுத்தி வழங்கக் கோரியும் விஜயகுமார், ராஜ்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி சந்திரசேகர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை அரசிடம் மே 18-ல் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதைப் பதிவு செய்து கொண்டு மனுக்களை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave your comments here...