பெண்களை முறைத்துப் பார்த்தல், விசில் அடித்தல் கூடாது – மோட்டார் வாகன சட்டத்தை திருத்தியது தமிழ்நாடு அரசு

தமிழகம்

பெண்களை முறைத்துப் பார்த்தல், விசில் அடித்தல் கூடாது – மோட்டார் வாகன சட்டத்தை திருத்தியது தமிழ்நாடு அரசு

பெண்களை முறைத்துப் பார்த்தல், விசில் அடித்தல் கூடாது – மோட்டார் வாகன சட்டத்தை திருத்தியது தமிழ்நாடு அரசு

பேருந்து பயணத்தின் போது பெண்களுக்கு தொந்தரவு தரும் பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடவும், தொடர்ந்து அவர் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் காவல்நிலையத்தில் அவரை ஒப்படைக்கவும் அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்லது. பொது போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக புதிய விதிகளை சேர்த்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையில்
*பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது. கூச்சலிடக்கூடாது, விசிலடிக்க கூடாது. *பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை வாகனத்தில் இருந்து இறக்கிவிடலாம்.
*நடத்துனர் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம்.
* ஆண் பயணிகள் கூச்சலிடுதல், கண் அடித்தல், விசில் அடித்தல், சைகை உள்ளிட்டவற்றை செய்யக் கூடாது.
*அதேபோல், பெண் பயணிகள் வாகனத்தில் ஏறவோ, இறங்கவோ உதவி செய்கிறேன் என்ற பேரில் தவறான நோக்கில் நடத்துநர்கள் தொடக்கூடாது. பயணத்தின் நோக்கம் குறித்து பொருத்தமற்ற கேள்விகளை பெண் பயணிகளிடம் கேட்கக் கூடாது.
என பல்வேறு அறிவுறுத்தல்கள் கண்டக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளிலும் மேற்கண்டவாறு திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

Leave your comments here...