சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிக்கு சென்னையில்‌ நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

இந்தியா

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிக்கு சென்னையில்‌ நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிக்கு சென்னையில்‌ நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் நடைபெற்ற 44 வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் துவக்க விழாவிற்கு கலந்து கொண்டதற்கும், இந்த போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு உதவி செய்ததற்கு பிரதமருக்கு நன்றி. சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் வேண்டுகோளையேற்று, 2024 ஜன., ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு, கடந்த மே 6ம் தேதி தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தேவையான உத்தரவாதங்களை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டும். இது தொடர்பாக அத்துறை அமைச்சருக்கு, கடந்த மே 5ம் தேதி கடிதம் எழுதியுள்ளேன். செப்டம்பர் 2022 இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்த உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதால், அதனை விரைவில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...