துணை ஜனாதிபதி தேர்தல்: வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தங்கர்.!

இந்தியா

துணை ஜனாதிபதி தேர்தல்: வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தங்கர்.!

துணை ஜனாதிபதி தேர்தல்:  வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தங்கர்.!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில், மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தன்கர் (வயது 71) போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற 22-ம் தேதி கடைசி நாள் ஆகும். துணை ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள். மட்டுமே வாக்களிப்பார்கள். பாராளுமன்றம் மற்றும் மேல்சபையைச் சேர்ந்த 788 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பதால் ஓட்டுப்பதிவு பாராளுமன்றத்தில் மட்டுமே நடக்கிறது.

இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தங்கர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Leave your comments here...