என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலம் பிரபலமாக நினைப்பவர்களை பார்த்து வருத்தப்படுகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

தமிழகம்

என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலம் பிரபலமாக நினைப்பவர்களை பார்த்து வருத்தப்படுகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலம் பிரபலமாக நினைப்பவர்களை பார்த்து வருத்தப்படுகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

கரூரில் ரூ.581.44 கோடி மதிப்பிலான 99 புதிய பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ.28.60 கோடி மதிப்பிலான 95 முடிவுற்ற பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “ரூ.47 கோடியில் கரூர் திருமாநிலையூர் விரைவில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் ஜவுளி காட்சி அரங்கம், ஜவுளி பொருட்கள் பரிசோதனை மையம் அமைக்கப்படும். தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை நினைத்து நான் மன நிறைவு அடைகிறேன். திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது முகத்தில் தெரிகிறது. கடல் இல்லாத கரூருக்கு கடல் போல் மக்கள் இங்கு வந்திருக்கிறார்கள். பேசாமல் உங்களை பார்த்து கொண்டு இருக்கலாம் போல் இருக்கிறது.

கரூர் என்றால் பிரம்மாண்டம். அதற்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டு. எப்போதும் எதையும் பிரமாண்டமாக நடத்துபவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. மக்கள் பணிகளுக்கு இலக்கு வைத்து முடித்து காட்டுபவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புகளை குறுகிய காலத்தில் வழங்கியவர். இதை செய்து காட்டிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பாராட்டுகள். அவருடன் துணை நின்ற அனைவருக்கும் வாழ்த்துகள் ஆட்சிக்கு வந்த முதல்நாள் முதல் மக்களுக்காக பணியாற்றி வருகிறோம்.

கருணாநிதிதான் என்னுள் இருந்து என்னை இயக்கி கொண்டிருக்கிறார். உங்களுடைய ஆட்சியில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று மக்களின் முகங்கள் எனக்கு சொல்லுகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். இந்த முகங்கள் மூலமாக திமுக ஆட்சி மக்களை முன்றேன்றும் ஆட்சியாக அமைந்துள்ளது என்பது தெரிகிறது.

மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் தான் வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரம் இல்லை. என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலம் பிரபலமாக நினைப்பவர்களை பார்த்து வருத்தப்படுகிறேன். நானும் இருக்கிறேன் என்பதை காட்டி பேட்டி தருவோருக்கு பதில் அளிக்க விரும்பவில்லை” என்று அவர் கூறினார்.

Leave your comments here...