சிவகாசியில் வைகாசி விசாகம் நாளை முன்னிட்டு குழந்தைகள் காவடி எடுத்து உற்சாகம்..!

ஆன்மிகம்

சிவகாசியில் வைகாசி விசாகம் நாளை முன்னிட்டு குழந்தைகள் காவடி எடுத்து உற்சாகம்..!

சிவகாசியில் வைகாசி விசாகம் நாளை முன்னிட்டு குழந்தைகள் காவடி எடுத்து உற்சாகம்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், வைகாசி விசாகம் திருநாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான குழந்தைகள் காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். சிவகாசி காத்த நாடார் தெருவில் உள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் இருந்து, 9ம் ஆண்டு குழந்தை வேலன் காவடி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர்.

சிவகாசி கருப்பசாமி கோவில், சிவன் கோவில், முருகன் கோவில், ஸ்ரீஅய்யா நாராயணன் கோவில்களில் தரிசனம் செய்துவிட்டு, திருத்தங்கல் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். வைகாசி விசாகம் நாளில் குழந்தைகள் ஆர்வமுடன் காவடி எடுத்து, உற்சாகத்துடன் பாதயாத்திரையாக சென்று முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை குழந்தை வேலன் பாதயாத்திரைக்குழு நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

– மதுரை ரவிசந்திரன்

Leave your comments here...