ஜம்மு – காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.!

இந்தியா

ஜம்மு – காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.!

ஜம்மு – காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.!

ஜம்மு – காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக அப்பாவி மக்கள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர், போலீசார் போன்றவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.

தீவிரவாதிகளின் வெறி ஆட்டத்திற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள சக்ரதாஷ் கண்டி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று இரவு முதல் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனை தொடர்ந்து வீரர்கள் தந்த பதிலடியில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி துபைல் உட்பட தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் என மொத்தம் இருவர் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்து ஏகே ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள், கையெறி குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்னும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காஷ்மீரின் சோப்பூரில் ஜலூரா பகுதிக்கு உட்பட்ட பானிபோரா வன பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய பாகிஸ்தானிய பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும். 2 வெளிநாட்டு பயங்கரவாதி மற்றும் ஒரு உள்ளூர் பயங்கரவாதி தப்பியுள்ளனர்.

Leave your comments here...