பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

இந்தியாஉலகம்

பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

இந்தியா வருகை தந்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

அரசுமுறை பயணமாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று இந்தியா வந்துள்ளதையடுத்து, இன்று காலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா ரஷியாவிடமிருந்து ஏதேனும் வாங்க விரும்பினால், அதை விநியோகம் செய்ய தயாராக இருக்கிறோம்.

அதுகுறித்து பேசி பரஸ்பரம் ஏற்றுகொள்ளும் வகையிலான ஒப்பந்தத்தில் ஈடுபட தயாராக இருக்கிறோம்” என்றார். இந்தியா ஒருவேளை உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்தால் மகிழ்ச்சியே. இந்தியா எங்களின் பொதுவான கூட்டாளி. நாங்கள் உக்ரைனுடன் பாதுகாப்பு நிமித்தமாகவே பேசி வருகிறோம். ஆனால் மேற்கத்திய நாடுகள் இதனை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டன. இந்தியா விரும்பினால் மத்தியஸ்தம் செய்யலாம். நாங்கள் ஆரம்பத்தில் இருந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறுகிறோம் ஆனால் உலக நாடுகள் எங்கள் ராணுவ நடவடிக்கையை போர் என்றழைப்பது ஏற்புடையது அல்ல என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியா வருகை தந்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக, உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ள நிலையில், மேற்குலக நாடுகள் கடும் அழுத்தும் தந்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவிடமிருந்து இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் வாங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இரு நாட்டு தலைவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவின் ரூபாய் மற்றும் ரஷியாவின் ரூபிளை கொண்டே இரு நாட்டு வர்த்தகத்தை மேற்கொள்வதில் இரு நாடுகளும் கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...