உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ரூ 2.52 லட்சம் மாத ஊதியம் உயர்வு – அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு..!

உலகம்

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ரூ 2.52 லட்சம் மாத ஊதியம் உயர்வு – அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு..!

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ரூ 2.52 லட்சம் மாத ஊதியம் உயர்வு – அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு..!

உக்ரைன் மீது 4-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் ரஷியா, உக்ரைனுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற போரில் ரஷ்யாவின் எல்லைப் பகுதி அருகே அமைந்திருக்கும் கார்கிவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்த நிலையில், அவர்களை முன்னேற விடாமல் உக்ரைன் ராணுவத்தினர் தீவிர சண்டையில் ஈடுபட்டனர். வீதிகளில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் சண்டை முற்றியதால், பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில், சுற்றி வளைத்த ரஷ்ய வீரர்களை விரட்டியடித்துவிட்டு, முழு கார்கிவ் நகரையும் மீட்டு விட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, ரஷ்யாவின் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களையும், ராணுவ தளவாடங்களையும் அழித்து விட்டதாக உக்ரைன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு மாத ஊதியம் உயர்வு வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 2.52 லட்சம் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Leave your comments here...