ஒரு தவணை மட்டுமே செலுத்தும் “ஸ்புட்னிக் லைட்” கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி..!

இந்தியா

ஒரு தவணை மட்டுமே செலுத்தும் “ஸ்புட்னிக் லைட்” கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி..!

ஒரு தவணை மட்டுமே செலுத்தும் “ஸ்புட்னிக் லைட்” கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி..!

கொரோனாவை தடுக்க, ஒரு தவணை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்கியிருக்கிறது.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஸ்புட்னிக்-லைட் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 9வது கொரோனா தடுப்பூசி ஆகும். முன்னதாக கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசியை மத்திய அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வர அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், நாட்டில் கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட பேருதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ரெட்டி லேபரட்டரிஸ், சீரம் நிறுவனம், பெனாகியா பயோடெக்,ஹெட்டிரோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்கின்றன. இந்த தடுப்பூசி தனியார் மூலமாக மட்டுமே கிடைக்கும். அரசு இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி ரஷியாவின் கேமலேயா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. ரஷ்யாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை செலுத்திய 21 நாட்களுக்குப் பிறகு கொரோனாவிலிருந்து 65.4 சதவிகிதம் பாதுகாப்பு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு தவணைகளை கொண்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 29 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தது. இதையடுத்து அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave your comments here...