பஞ்சாப் சட்டசபை தேர்தல் : காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி..!

அரசியல்

பஞ்சாப் சட்டசபை தேர்தல் : காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி..!

பஞ்சாப் சட்டசபை தேர்தல் : காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி..!

பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் ராகுல் காந்தி பஞ்சாபில் நடைபெற்ற மெய்நிகர் பேரணியின் போது கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவித்தார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை ராகுல்காந்தி அறிவித்தார். “பஞ்சாப் முதல்வர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர், வரும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் சானி முதல்-மந்திரி வருவார்” என்று ராகுல் காந்தி கூறினார். சரண்ஜித் சிங் சன்னி முதல்-மந்திரி வேட்பாளர் என அறிவிப்பு வெளியிட்ட பின் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Leave your comments here...