நகர்புற உள்ளாட்சி தேர்தல் : பாஜக தனித்துப்போட்டி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்!

அரசியல்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் : பாஜக தனித்துப்போட்டி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்!

நகர்புற உள்ளாட்சி தேர்தல் : பாஜக தனித்துப்போட்டி  – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இதனிடையே, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக இடையே இழுபறி நீடித்து வந்தது. ஒட்டுமொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை பாஜக எதிர்பார்ப்பததாகவும், ஆனால், பாஜகவுக்கு 4 முதல் 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்க வாய்ப்பு இருந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால், கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Leave your comments here...