நடிகர் விஜய் குறித்து நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றம்..!

சினிமா துளிகள்தமிழகம்

நடிகர் விஜய் குறித்து நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றம்..!

நடிகர் விஜய்  குறித்து நீதிபதி  தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றம்..!

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரும் வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிரான தனி நீதிபதியின் கருத்து நீக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் விலக்கு கோரியதாகவும், இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மதிப்புக்கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு செல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது என்பதால் விலக்கு கேட்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் விஜய் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாரயாணா, முகமது சபீக் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் குறித்து நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறைக் கருத்துக்கள் நீக்கம் செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

Leave your comments here...