அபுதாபியில் டிரோன் தாக்குதல்: 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு..!

உலகம்

அபுதாபியில் டிரோன் தாக்குதல்: 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு..!

அபுதாபியில் டிரோன் தாக்குதல்: 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையம் அருகே  டிரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த டிரோன் தாக்குதலில் அங்குள்ள எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கில் 3  எரிபொருள் டேங்குகள் தீப்பற்றி எரிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு  ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது. கடல்வழியாக  அபுதாபி அருகே வந்து டிரோன் விமானங்களை இயக்கி தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல் வெளிவந்துள்ளது. 

Leave your comments here...