சிறப்பு பாதுகாப்புப் படையின் விதிகளின்படி, பிரதமருக்கு புது கார் ஏன்? மத்திய அரசு விளக்கம்.!

இந்தியா

சிறப்பு பாதுகாப்புப் படையின் விதிகளின்படி, பிரதமருக்கு புது கார் ஏன்? மத்திய அரசு விளக்கம்.!

சிறப்பு பாதுகாப்புப் படையின் விதிகளின்படி, பிரதமருக்கு புது கார் ஏன்? மத்திய அரசு விளக்கம்.!

எஸ்.பி.ஜி.படையின் விதிகளின்படி, பிரதமர் மோடி பயன்பாட்டிற்கு, ‘மெர்சிடிஸ் மேபேக்’ ரக சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிக பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கிய, ‘பி.எம்.டபிள்யு., – 7 சீரிஸ், லேண்ட் ரோவர், ரேஞ்ச் ரோவர் வோக்’ ஆகிய கார்களை, பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வந்தார். சமீபத்தில் இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க சென்ற பிரதமர் மோடி, மெர்சிடிஸ் மேபேக் என்ற சொகுசு காரில் வந்திறங்கியது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த காரின் விலை, 12 கோடி ரூபாய் என ஊடகங்கள் தெரிவித்தன. அதற்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மெர்சிடிஸ் மேபேக்கின் விலை குறைவு தான். ஊடகங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த அந்த யூக விலையில், மூன்றில் ஒரு பங்கு தான் அதன் உண்மையான விலை.எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படைப் பிரிவினர், பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

அந்த படைப் பிரிவின் விதிகளின்படி, ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பிரதமர் பயன்படுத்தும் வாகனங்கள் மாற்றப்பட வேண்டும். எனினும், எட்டு ஆண்டுகளாக பழைய கார்களையே பிரதமர் பயன்படுத்தி வந்தார்.

பிரதமரின் பாதுகாப்பு நலனை கருத்தில் வைத்து, அவரின் கார்களை மாற்ற, எஸ்.பி.ஜி., படையினர் முடிவு செய்தனர். பிரதமரின் விருப்பத்தை கூட பெறாமல், அவர்கள் இந்த முடிவை எடுத்தனர். பிரதமர் பயன்படுத்தி வந்த பி.எம்.டபிள்யு., ரக கார் இப்போது தயாரிக்கப்படுவது இல்லை என்பதால், மெர்சிடிஸ் நிறுவன கார் வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...