வேனில் கடத்திய 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – 3 பேர் கைது.!

தமிழகம்

வேனில் கடத்திய 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – 3 பேர் கைது.!

வேனில் கடத்திய 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – 3 பேர் கைது.!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வாகன சோதனையில், போது வேனில் கடத்தி வந்த 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேர்வை, போலீஸ் ஏட்டுக்கள் முகிலன், குடியரசன் ஆகியோர் திண்டுக்கல் மதுரை ரோட்டில் வாகன சோதனை செய்தனர்.

வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பு வாகன சோதனை செய்த போது, கிருஷ்ணகிரியில் இருந்து மதுரை நோக்கி வந்த வேனை மறித்தனர். பின்,அதை சோதனை செய்த போது காய்கறி மூடைகளுக்கும் இடையே வெள்ளை சாக்கில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை உள்ளிட்ட பலவகை யான போதைப் பாக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 300 கிலோ எடை உள்ள போதை பொருட்கள் போலீசார்பறிமுதல் செய்தனர்.

இது சம்மந்தமாக, வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்குப் பதிவு செய்து ,போதை பொருளை கடத்தி வந்த , கிருஷ்ணகிரி தேன்கனிக் கோட்டா வை சேர்ந்த கௌரப்பன் (வயது 21) பேரையூர் சென்ராஜ் (45) கிருஷ்ணகிரி இலட்சுமிபுரத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி (20) ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Leave your comments here...