பையில் ரூ.1 கோடி ரூபாயுடன் வீதிகளில் சுற்றிய இளைஞர் கைது..!

இந்தியா

பையில் ரூ.1 கோடி ரூபாயுடன் வீதிகளில் சுற்றிய இளைஞர் கைது..!

பையில் ரூ.1 கோடி ரூபாயுடன் வீதிகளில் சுற்றிய இளைஞர் கைது..!

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா மாநகராட்சிக்கு வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில், கோல்கட்டாவின் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பார்க் தெருவில் பணத்துடன் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு சென்று நடத்திய சோதனையில், பிரதம் கோஷ்(27) என்பவரை கைது செய்து அவர் வைத்திருந்த ரூ.1 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்பதை பிரிதம் கோஷால் சொல்ல முடியவில்லை.

இதுனையடுத்து அவரை போலீசார், இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்திய பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட பிரிதம் கோஷ், தெற்கு கோல்கட்டாவின் பேங்க்சல் பகுதியை சேர்ந்தவர் என்பதை கண்டறிந்த போலீசார், அந்த வாலிபர் தேர்தல் காரணங்களுக்காக அல்லது ஹவாலா வழியாக பணத்தை பெற்றாரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...