15 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய்க்கு தண்ணீர் : விவசாயிகள் மகிழ்ச்சி.!

உள்ளூர் செய்திகள்தமிழகம்

15 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய்க்கு தண்ணீர் : விவசாயிகள் மகிழ்ச்சி.!

15 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய்க்கு தண்ணீர் : விவசாயிகள் மகிழ்ச்சி.!

மதுரை மாவட்டத்தில் வைகை தண்ணீர் நிரம்பி வருவதால், மதுரை – விருதுநகர் – சிவகங்கை இராமநாதபுரம் கண்மாய்களுக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் நிலையூர் கால்வாய் மூலமாகவும், நரிக்குடி ஒன்றியப் பகுதிக்கு கிருதுமால் நதிமூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. காரியாபட்டி அருகே எஸ்.தோப்பூர் கிராம கண்மாய் பகுதிக்கு மதுரை மாவட்டம் கொக்குளம் கண்மாயிலிருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தோப்பூர் கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்தனர். தற்போது, கல்லுப்பட்டி அருகே மடை திறக்கப்பட்டதும், 15 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வருகை தந்தது. ஒன்றியக் கவுன்சிலர் தோப்பூர் முருகன் மற்றும் விவசாயிகள் கால்வாயில் மலர்தூவி வரவேற்ற்னர்.

Leave your comments here...