இந்தியா வரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் : கையெழுத்தாகும் 10 இருதரப்பு முக்கிய ஒப்பந்தங்கள்..!

இந்தியாஉலகம்

இந்தியா வரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் : கையெழுத்தாகும் 10 இருதரப்பு முக்கிய ஒப்பந்தங்கள்..!

இந்தியா வரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்  : கையெழுத்தாகும் 10 இருதரப்பு முக்கிய ஒப்பந்தங்கள்..!

இந்தியா – ரஷியா நாடுகளிடையேயான 21-வது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 6-ம் தேதி டெல்லி வருகிறார்.

2019-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் மேற்கொள்ள உள்ள முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. இருநாட்டு தலைவர்களும் சர்வதேச பிரச்சினைகள் மற்றும் பல்வேறு துறைகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்தியா – ரஷியா இடையே முக்கியமான 10 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என்று ரஷிய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.இருநாட்டு வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்களிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற உள்ளன.

அதன்படி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி செர்கேய் ஷோய்கு ஆகியோர் இருதரப்பு உறவுகள் குறித்து சந்தித்து பேச உள்ளனர்

Leave your comments here...