மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு மீனாட்சி பெயர் சூட்ட வேண்டும்: பா.ஜ.க.

அரசியல்தமிழகம்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு மீனாட்சி பெயர் சூட்ட வேண்டும்: பா.ஜ.க.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு  மீனாட்சி பெயர் சூட்ட வேண்டும்: பா.ஜ.க.

மதுரையில் பாஜக மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பேருந்து நிலையம் என்று பெயரிட்டு, அதன் தொடக்க விழாவிற்கு பாரத பிரதமர் மோடி அவர்களை அழைத்துவந்து தொடங்கவேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல், மத்திய அரசு நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பாரத பிரதமரின் புகைப்படம் இல்லாமல் செயல்படுத்தினால், அலுவலகத்தை முற்றுகை போராட்டம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் அவலநிலையை கண்டித்தும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மதுரை மாநகர் தலைவர் டாக்டர். சரவணன் கூறுகையில், முல்லை பெரியார் அணையில் 142 அடி தண்ணீர் தேக்க வேண்டும். ஆனால், 138 அடியிலேயே இரவோடு இரவாக தமிழக அரசு, கேரள அரசுடன் களவாணி தனமாக கைகோர்த்து திறந்து விட்டனர். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தல். தொடர்ந்து, இருபத்தி ஐந்து மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளனர். ஆனால், தமிழக அரசு குறைக்கவில்லை விடியல் அரசு என்று கூறிவிட்டு மக்களுக்கு விடியல் இல்ல அரசாக உள்ளது, அதனைக் கண்டித்து இந்த வாரம் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம். நான்கு வழிச்சாலை கொண்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மதுரை விரகனூர் பகுதியில் வெண்கல சிலை அமைக்க வேண்டும்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்ட நிலையில், எவ்வாறு அன்னை மீனாட்சி பேருந்து நிலையம் என்ற பெயர் சூட்டுவது என்பது குறித்த கேள்விக்கு? பலர் தங்களது பெயரை காலப்போக்கில் மாற்றுகின்றனர். நமது தமிழக முதல்வர் கூட பெயரை மாற்றியுள்ளார், அதனால் பெயர் மாற்றுவதால் எந்த பிரச்சினையும் இல்லை. மதுரை கோவில் நகரம் எனவே ,தமிழக முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.

தமிழகம் இந்தியாவிற்குள் தான் உள்ளது மத்திய அரசை சார்ந்தே மாநில உள்ளது. தமிழக முதல்வர் வெள்ள நிவாரண நிதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். மாநில அரசு மத்திய அரசை சார்ந்தே உள்ளது அதனால், மத்திய அரசு சார்ந்து உள்ள திட்டங்கள் துவங்கி வைக்க பிரதமர் மோடியை கூப்பிட வேண்டும். மாநில அரசுக்கு மத்திய அரசு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யும். எதிர்க்கட்சியாக இருப்பதால் ஒதுக்கி வைக்காது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவக்சின் தடுப்பூசிக்கு கூடிய விரைவில் உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் அகதி, அவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி அவரை புறம்தள்ளி மறந்துவிட்டது, அவர் அரசியல் உள்ளார் என்றே காண்பதற்காக கடுமையாக பேசியுள்ளார், அவர் மதுரையில் கால்வைக்க முடியாது. ஜெய் பீம் படத்தில் சூர்யாவுக்கு எதிராக சர்ச்சைகள் எழும் பொழுது அவரை தாக்குப் பவருக்கு பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரையில் கால் வைத்தால் அவரை தாக்குபவர்களுக்கு பணம் வழங்கப்படும் என, மதுரை பாஜக சார்பில் அறிவிக்கிறோம்.

திமுக அமைச்சர் கே என் நேரு கம்யூனிஸ்ட் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குறித்து, அவதூறாக பேசியது குறித்த கேள்விக்கு? டுவிட்டரில் அரசியல் செய்யும் மாற்று கட்சியை சேர்ந்தவராக சு.வெங்கடேசன் இருந்தாலும், அவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர். எனவே, அவரை தரக்குறைவாக பேசியதை மதுரை பாஜக கண்டிக்கின்றது. கூட்டணி கட்சிகள் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். சு.வெங்கடேசன் தமிழ் குறித்து பல்வேறு கடிதங்களை மத்திய அமைச்சர்களுக்கு அனுப்புகிறார். ஆனால், இந்த சம்பவத்திற்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவிக்கவில்லை. கூட்டணி கட்சி என்பதால் இறங்கி செல்கிறீர்கள். வைகோ மற்றும் திருமாவளவன் மக்களுக்காக போராடவில்லை. ஓட்டு வங்கிக்காக மட்டுமே கூட்டணி வைத்து செல்கின்றனர் என பேசினார்.

Leave your comments here...