இந்தியா மீது தலிபான் பார்வை பட்டால் வான்வழித் தாக்குதல் – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

இந்தியா

இந்தியா மீது தலிபான் பார்வை பட்டால் வான்வழித் தாக்குதல் – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

இந்தியா மீது தலிபான் பார்வை பட்டால் வான்வழித் தாக்குதல் – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

தலீபான்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்தால் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்

லக்னோவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:- இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. இந்தியாவை நோக்கி கண்களை உயர்த்த எந்த நாடும் துணிவதில்லை. இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலீபான்களால் துன்பத்தை அனுபவிக்கின்றன.

ஆனால், தலீபான்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்தால் தெரியும். இந்தியா ஒரு வான்வழித் தாக்குதலுக்கு தயாராக உள்ளது’ என கூறினார்.

Leave your comments here...