100 கோடி தடுப்பூசி சாதனை – பிரதமரை கெளரவித்த ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம்

இந்தியா

100 கோடி தடுப்பூசி சாதனை – பிரதமரை கெளரவித்த ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம்

100 கோடி தடுப்பூசி சாதனை – பிரதமரை கெளரவித்த   ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம்

இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருப்பதை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் கொண்டாடி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. கொரோனா பரவல் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் கோரிக்கை வைத்ததன் பேரில் கடந்த மே மாதம் முதல் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதனையடுத்து இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது.

கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 100 கோடியை கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம். ஜப்பானை விட 5 மடங்கு, ஜெர்மனியை விட 9 மடங்கு மற்றும் பிரான்சில் போடப்பட்ட தடுப்பூசிகளின் அளவை விட 10 மடங்கு அதிகம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை இந்தியா செலுத்தியிருப்பதை கொண்டாடும் விதமாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அதன் விமானத்தில் பிரதமர் மோடியின் புகைப்படமும், மருத்துவர்களின் புகைப்படத்தையும் இடம் பெறச் செய்துள்ளது. மூன்று போயிங் 737 விமானத்தில் பிரதமர், மருத்துவர்கள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் நடந்த இந்நிகழ்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சக் மாண்டவியா, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave your comments here...