நவராத்திரி 5ம் நாளான இன்று மீனாட்சி அம்மன் சங்கீத சியாமளை திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்தார்

ஆன்மிகம்

நவராத்திரி 5ம் நாளான இன்று மீனாட்சி அம்மன் சங்கீத சியாமளை திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்தார்

நவராத்திரி 5ம் நாளான இன்று மீனாட்சி அம்மன் சங்கீத சியாமளை  திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்தார்

உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த வியாழன் அன்று தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வரும் நிலையில், 5ம் நாளான இன்று கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதியின் 2ஆம் பிரகாரத்தில் அமைக்கப்படும் நவராத்திரி கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் சங்கீத சியாமளை திருக்கோலத்தில் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நவராத்திரியை முன்னிட்டு கோவிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் ஆடி வீதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

Leave your comments here...