சார்க் மாநாட்டில், ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும் – பாகிஸ்தான் கோரிக்கையால் மாநாடு ரத்து

உலகம்

சார்க் மாநாட்டில், ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும் – பாகிஸ்தான் கோரிக்கையால் மாநாடு ரத்து

சார்க் மாநாட்டில், ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும் – பாகிஸ்தான் கோரிக்கையால் மாநாடு ரத்து

சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் தலிபான் பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது. இதில், ஒருமித்த முடிவு எட்டப்படாததால், மாநாடு ரத்து செய்யப்பட்டது.

தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பூடான், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு வரும் 25 ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருந்தது.

இந்த மாநாட்டிற்கு, நேபாளம் தலைமை ஏற்க இருந்த நிலையில், தலிபான் பிரதிநிதிகளையும், இந்த மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது

ஆனால், இதில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஒருமித்த முடிவு எடுக்கப்படவில்லை. பெரும்பாலான நாடுகள், மாநாட்டில் ஆப்கனுக்காக, காலி இருக்கை ஒன்றை வைக்கலாம் எனக்கூறியதாக தெரிகிறது. இதனை பாகிஸ்தான் ஏற்று கொள்ளவில்லை. இதனையடுத்து வரும் 25ம் தேதி நடைபெற இருந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது.

Leave your comments here...