74 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு மத்திய அரசு சாதனை…!

இந்தியா

74 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு மத்திய அரசு சாதனை…!

74 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு மத்திய அரசு சாதனை…!

நாடு முழுதும் நேற்று இரவு வரை, 74.32 கோடிக்கும் அதிகமான ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சிக்கிம், கோவா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:நேற்று இரவு 8:00 மணி நிலவரப்படி, நேற்று மட்டும் 50 லட்சத்து 25 ஆயிரத்து 159 ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இதுவரை நாடு முழுதும் போடப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை, 74.32 கோடியை கடந்தது.

கோவா, ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம், லடாக், லட்சதீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த மகத்தான பணியை வெற்றிகரமாக செய்து முடித்த சுகாதார பணியாளர்களுக்குபாராட்டுக்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...