மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தின் கட்டமைப்பு : காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட உபகரணம் அறிமுகம்..!

இந்தியா

மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தின் கட்டமைப்பு : காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட உபகரணம் அறிமுகம்..!

மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தின் கட்டமைப்பு : காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட உபகரணம் அறிமுகம்..!

மும்பை-அகமதாபாத் அதி வேக ரயில் தட திட்டத்தின் கட்டமைப்பை துரிதப்படுத்துவதற்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஃபுல் ஸ்பேன் லான்ச்சிங் எக்யுப்மென்ட்- ஸ்ட்ராடில் காரியர் மற்றும் கிர்டர் டிரான்ஸ்போர்டரை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் காணொலி மூலம் அறிமுகம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்:- தற்சார்பு இந்தியா இயக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக 1100 மெட்ரிக் டன் திறன் கொண்ட இந்த உபகரணத்தை சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரத்தில் லார்சன் & டூப்ரோ நிறுவனம் வடிவமைத்து தயாரித்ததாக கூறினார். இதற்காக 55 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் எல்&டி கூட்டு சேர்ந்தது.
 
இத்தகைய உபகரணத்தை வடிவமைத்து தயாரிக்கும் இத்தாலி, நார்வே, கொரியா மற்றும் சீனாவின் பட்டியலில் இந்தியாவும் தற்போது இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அதி வேக ரயில்வே கட்டமைப்பை விரைந்து நிறுவ முடியும்.

Leave your comments here...