நித்தியானந்தா மதுரை ஆதீனம் என கூறி வந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி எச்சரிக்கை

அரசியல்

நித்தியானந்தா மதுரை ஆதீனம் என கூறி வந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி எச்சரிக்கை

நித்தியானந்தா  மதுரை ஆதீனம் என கூறி வந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி எச்சரிக்கை

நித்தியானந்தா மதுரை ஆதீனம் என கூறி வந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
நித்தியானந்தா 293வது ஆதீனமாக பதவி ஏற்றுக்கொண்டார் என்பது ஏற்புடையது அல்ல என்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தொழிலாளர் அணி நிர்வாகி ரமேஷ் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் கே சி திருமாறன் அளித்த பேட்டியில் கூறியதாவது: நித்தியானந்தா மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றால், அது செல்லாது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சி ஆகியோர் இணைந்து போராட்டம் நடத்தி அதன் பின் மதுரையில் இருந்து வெளியேறினார்.

தற்போது மதுரை ஆதீனம்மறைவையொட்டி மீண்டும் நித்யானந்தா 293-வது ஆதீனமாக பொறுப்பேற்க உள்ளதாக கூறியுள்ளார். மதுரை ஆதீனத்தை பொறுத்தவரையில் சைவ சித்தாந்த வழியை கடைபிடிக்கும் வேளாளர்களே பதவியேற்க முடியும். நித்தியானந்தா ஆதீனமாக பொறுப்பேற்க முடியாது .அவர் மீண்டும் மதுரை வந்தால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் . இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...