கவுண்டவுன் தொடங்கியது : நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி – எப்.10 ராக்கெட்..!

இந்தியா

கவுண்டவுன் தொடங்கியது : நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி – எப்.10 ராக்கெட்..!

கவுண்டவுன் தொடங்கியது  : நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி – எப்.10 ராக்கெட்..!

ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் நாளை ( 12ஆம் தேதி – வியாழக்கிழமை) பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி விண்ணில் செலுத்தப்படும் என்று விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

“இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ‘ஈஓஎஸ்-03’ (EOS-3) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 2,268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை அதிகாலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதையடுத்து விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் இன்று காலை 0343 மணிக்கு துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை இஸ்ரோவால் விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், நாளை திட்டமிட்டபடி விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டில், விண்ணில் செலுத்தப்பட இருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் அதிநவீன சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைகோளாகும். இது பூமியின் மேல்பரப்பில் இருந்து 36 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

Leave your comments here...