2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் – சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

விளையாட்டு

2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் – சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் – சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சென்ற ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, நாளை மறுநாள் (23ஆம் தேதி) ஜப்பானின் தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்க உள்ளது.

வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் ஒலிம்பிக் திருவிழா இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2032ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 2018 காமன்வெல்த் போட்டிகளை நடத்திய கோல்ட் கோஸ்ட் உட்பட குயின்ஸ்லாந்து மாநிலம் முழுவதும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2024-ம் ஆண்டிற்கான போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும், அதற்கடுத்த போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்ஜெலஸ் நகரிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...