மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியையும், ஓய்வூதியர்களுக்கு அகவிலை நிவாரணத்தையும் உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, 2021 ஜூலை 1 முதல் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 17 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 28 சதவீதமாக, அதாவது 11 சதவீதம், உயர்த்தி வழங்கப்படும்.

கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட வரலாறு காணாத சூழ்நிலையின் காரணமாக, 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 ஆகிய தேதிகளில் இருந்து நிலுவையில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது, 2021 ஜூலை 1 முதல் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 17 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 28 சதவீதமாக, அதாவது 11 சதவீதம், உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 மூலம் உருவாகியுள்ள கூடுதல் தவணைகளை இந்த உயர்வு பிரதிபலிக்கிறது. 2021 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான காலகட்டத்திற்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 17 சதவீதமாக இருக்கும்.

Leave your comments here...