ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாடு முழுவதும் 34760 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம்..!

இந்தியா

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாடு முழுவதும் 34760 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம்..!

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாடு முழுவதும் 34760 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம்..!

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது.

34000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாடு முழுவதும் கொண்டு சேர்த்து முக்கிய மைல்கல்லை கடந்துள்ளன.

இதுவரை 1,976 டேங்கர்களில் சுமார் 34,760 மெட்ரிக் டன் பிராணவாயு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
474 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் தென் மாநிலங்களுக்கு 20000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு அதிகளவில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 6476 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிற்கு முறையே 3,700, 4,800 மற்றும் 4,700 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன.

இதுவரை தமிழகத்திற்கு 6476 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5791 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2354 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 4697 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 4824 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 3791 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 560 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

Leave your comments here...