7-வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு முத்திரையை தபால் துறை வெளியிடுகிறது.!

இந்தியா

7-வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு முத்திரையை தபால் துறை வெளியிடுகிறது.!

7-வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு முத்திரையை தபால் துறை வெளியிடுகிறது.!

ஏழாவது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் 2021 ஜூன் 21 அன்று சிறப்பு முத்திரை வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு இந்திய தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஏழாவது சர்வதேச யோகா தினத்தன்று தில்லி தபால் வட்டத்தில் கீழ்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்:

* தில்லியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் 2021 ஜூன் 17 முதல் பதிவு செய்யப்படும் மற்றும் விநியோகிக்கப்படும் அனைத்து தபால்கள் மீது “யோகாவோடு இருங்கள், வீட்டில் இருங்கள்” எனும் செய்தி பொறிக்கப்படும்.

* தபால் நிலையங்களுக்கு வருவோரிடையே யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தில்லியில் உள்ள 60 முக்கிய தபால் நிலையங்களில் காணொலி ஒன்று ஒளிபரப்பப்படும்.

* கொவிட்டில் இருந்து குணமான பின்பு செய்யக்கூடிய யோகா குறித்த காணொலி உரை மற்றும் செய்முறை விளக்கம் 2021 ஜூன் 17 அன்று நடத்தப்பட்டது. தில்லி தபால் வட்டத்தின் அலுவலர்கள் இதில் பங்கேற்றார்கள்.

* கொவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி தில்லி தபால் வட்டத்தின் பல்வேறு அலுவலகங்களில் யோகா பயிற்சி நிகழ்ச்சிகள் 2021 ஜூன் 21 அன்று நடத்தப்படும்.

* ஏழாவது சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் சிறப்பு தபால் உரையை தில்லி வட்டத்தின் தலைமை தபால் அதிகாரி புதுதில்லி தலைமை தபால் நிலையத்தில் 2021 ஜூன் 21 அன்று வெளியிடுவார்.

Leave your comments here...