ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தென்மாநிலங்களுக்கு 17,700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்..!

இந்தியா

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தென்மாநிலங்களுக்கு 17,700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்..!

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தென்மாநிலங்களுக்கு 17,700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்..!

இந்திய ரயில்வே இதுவரை பல மாநிலங்களுக்கு 32,095 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை, 1834க்கும் மேற்பட்ட டேங்கர்கள் மூலம் விநியோகித்துள்ளது.

இதுவரை 444 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளன. தென் மாநிலங்களுக்கு 17,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் தமிழகம் போன்ற தென் மாநிலங்களுக்கு முறையே 3200, 4000, 4200, 5600 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன்களை விநியோகித்துள்ளன.3 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 14 டேங்கர்களுடன், 258 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.

இதுவரை மகாராஷ்டிராவுக்கு 614, உத்தரப் பிரதேசத்துக்கு 3797, மத்தியப் பிரதேசத்துக்கு 656, தில்லிக்கு 5722, ஹரியானாவுக்கு 2354, ராஜஸ்தானுக்கு 98, கர்நாடகாவுக்கு 4227, உத்தரகாண்ட்டுக்கு 320, தமிழகத்துக்கு 5674, ஆந்திரப் பிரதேசத்துக்கு 4037, பஞ்சாப்புக்கு 225, கேரளாவுக்கு 513, தெலங்கானாவுக்கு 3255, ஜார்கண்டுக்கு 38, அசாமுக்கு 560 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் அதிக ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், இன்று இரவு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...