தென்னந்தோப்பில் கள்ளச்சாரயம் தயாரித்தவர் கைது – 9 லிட்டர் கள்ளச்சாரயம் பறிமுதல்

தமிழகம்

தென்னந்தோப்பில் கள்ளச்சாரயம் தயாரித்தவர் கைது – 9 லிட்டர் கள்ளச்சாரயம் பறிமுதல்

தென்னந்தோப்பில் கள்ளச்சாரயம் தயாரித்தவர் கைது –  9 லிட்டர் கள்ளச்சாரயம் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூர் பகுதியில், கள்ளச்சாரயம் காய்ச்சி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, திருவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் மதுவிலக்கு போலீசார், சார்பு ஆய்வாளர் கணேசன் தலைமையில் தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராஜபாளையம், பச்சைமடம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (40) என்பவர், தனது தென்னந்தோப்பில் சாரய ஊறல் அமைத்து, கள்ளச்சாரயம் தயாரித்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

மேலும் தென்னந்தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 லிட்டர் கள்ளச்சாரயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தென்னந்தோப்பில் கள்ளச்சாரயம் தயாரித்து பதுக்கி வைத்திருந்த வெங்கடேஷை, திருவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...