ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் 44 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்பு.!

சமூக நலன்

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் 44 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்பு.!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் 44 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்பு.!

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டப்பிரிவு 370-ன் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசாங்கம் அறிவித்தது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை காஷ்மீர் பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர் முதன்முறையாக சம்பா பகுதியில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில், ‘ராணுவத்தில் சேர ஏராளமான இளைஞர்கள் விரும்பி, முகாமில் கலந்து கொண்டுள்ளனர். இது அவர்களது நாட்டிற்கு சேவை செய்யும் மனப்பான்மையை காட்டுகிறது. முகாமில் பார்த்தவரையில் இளைஞர்கள் ஆர்வத்துடனும், நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்புடனும் காணப்பட்டனர். இது காஷ்மீர் இளைஞர்கள் சரியான திசையை நோக்கி செல்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மொத்தம் 10 நாட்கள் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. நேற்று தொடங்கிய இந்த முகாம் 12-ம்தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

Leave your comments here...