தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – தமிழக அரசு

தமிழகம்

தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – தமிழக அரசு

தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – தமிழக அரசு

தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா கொரோனா பரிசோதனைக் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கு ரூ.1,200-லிருந்து ரூ.900 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.800-லிருந்து ரூ.550 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், குழுவாக சென்று கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு ரூ.600-லிருந்து ரூ.400 ஆகக் குறைக்கப்படுகிறது. வீட்டிற்கு நேரடியாகச் சென்று ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டால் மேற்குறிப்பிட்ட தொகையுடன் கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

Leave your comments here...