கொரோனா இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்..!

சமூக நலன்தமிழகம்

கொரோனா இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்..!

கொரோனா இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்..!

முககவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.

தற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

சோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.

Leave your comments here...