விவசாயிகள் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.814 கோடி இழப்பு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இந்தியா

விவசாயிகள் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.814 கோடி இழப்பு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

விவசாயிகள் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.814 கோடி இழப்பு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய அரசு அறிவித்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லி எல்லையில் அரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் நடைபெறும் இந்த போராட்டம் 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் ரூ.814 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய தரைவழிப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கட்கரி கூறும்போது:-டில்லியில் துவங்கிய விவசாயிகள் போராட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிகள் திறந்துவிடப்பட்டன. இதனால், அரசிற்கு கடந்த மார்ச் 16 வரையிலும் ரூ.814 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டும் இந்த இழப்பு உள்ளது.

இவற்றில் அதிகபட்சமாக பஞ்சாபில் ரூ.487 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் ரூ.326 கோடியும், ராஜஸ்தானில் ரூ.1.04 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதுபோல், எந்தவித இழப்பும் சுங்கச்சாவடிகளில் ஏற்படவில்லை. எனவே, பஞ்சாப், ஹரியானா , ராஜஸ்தான் மாநில அரசுகளிடம் அச்சாவடிகளை மீண்டும் அமைக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.’ இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...