காவேரி கூக்குரல் சார்பில் ஈரோட்டில்’மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி – பொதுமக்களும் பங்கேற்று மரம் நட அழைப்பு!

சமூக நலன்தமிழகம்

காவேரி கூக்குரல் சார்பில் ஈரோட்டில்’மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி – பொதுமக்களும் பங்கேற்று மரம் நட அழைப்பு!

காவேரி கூக்குரல் சார்பில் ஈரோட்டில்’மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி –  பொதுமக்களும் பங்கேற்று மரம் நட  அழைப்பு!

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 6-ம் தேதி ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் சுற்றுச்சூழல் ஆர்வம் கொண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று மரங்களை நடவு செய்து விவசாயிக்கு உதவலாம். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் ‘காவேரி கூக்குரல்’ என்ற மாபெரும் சுற்றுச்சூழல் இயக்கத்தை கடந்தாண்டு தொடங்கினார். விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த இயக்கம் மரம்சார்ந்த விவசாய முறையை ஊக்குவித்து வருகிறது.

இதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை 86 லட்சம் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு
செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சமூகப் பணியில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரையும் ஈடுப்படுத்தும் விதமாக ‘மரம் நட விரும்பு’ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டம் குளூர் பஞ்சாயத்து, சிவலிங்கபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி திரு. கே.எஸ்.ராஜேஸ்வரன் அவர்களின் நிலத்தில் இந்நிகழ்ச்சி நாளை மறுநாள் (டிசம்பர் 6) நடைபெற உள்ளது.

இதில் சுற்றுச்சூழல் ஆர்வம் கொண்ட இளைஞர்களும் பொதுமக்களும் தன்னார்வலர்களாக பங்கேற்று மரங்களை நடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...