கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் : பிரதமர் மோடி நேரில் ஆய்வு

இந்தியா

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் : பிரதமர் மோடி நேரில் ஆய்வு

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் : பிரதமர் மோடி நேரில் ஆய்வு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது.

இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) நேரில் செல்கிறார். முதல் கட்டமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு இன்று காலை நேரில் சென்றார்.


அந்நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. அதன் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்ததோடு தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.

Leave your comments here...