தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..!

தமிழகம்

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..!

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார்  முதல்வர் பழனிசாமி..!

மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவினியோக அமைச்சகம், அனைத்து ரேஷன் கடைகளையும் கணினி மயமாக்குவதற்காக ஒருங்கிணைந்த மேலாண்மை பொதுவினியோக திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க முடியும். இந்த திட்டம் தான் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்று அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது ஸ்மார்ட் ரேஷன் கார்டை ‘ஸ்கேன்’ செய்து அதன்மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து சோதனை அடிப்படையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 29-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் இன்று முதல் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கரூர், திருப்பூர், நெல்லை, தர்மபுரி, வேலூர், நாமக்கல், நீலகிரி, திருப்பத்தூர், தேனி, திருவள்ளூர், ஈரோடு, காஞ்சீபுரம், திருவாரூர், வடசென்னை, தென்சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், சிவகங்கை, திண்டுக்கல், கடலூர் ஆகிய 32 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஏற்கெனவே தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முன்னோட்ட அடிப்படையில் மேற்கொண்டதில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். அதே நிலை தமிழகம் முழுவதும் தொடரும். தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.நமது மாநிலத்தில் உள்ளவா்கள் வெளி மாநிலத்திற்கு போகும்போது அங்கு இந்த திட்டத்தின்படி அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். அதுபோன்று, வெளி மாநிலங்களில் இருந்து நமது மாநிலத்துக்கு வருபவா்களும், இங்கு அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், நம்முடைய சிறப்புத் திட்டங்களை அவா்கள் பெற முடியாது. அவா்கள் பயோமெட்ரிக் முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அமைச்சா் காமராஜ் தெரிவித்தாா்.இதுதவிர தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வருகிற 15-ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனை தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.இத்திட்டம் மூலம், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

Leave your comments here...