கோயில்களின் அறங்காவலர் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தமிழகம்

கோயில்களின் அறங்காவலர் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கோயில்களின் அறங்காவலர் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கோயில்களின் அறங்காவலர் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவும் அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலின் அறங்காவலர்களின் பெயர்களை வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், தாக்கல் செய்த மனுவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவ்வாறு நியமிக்கப்படும் அறங்காவலர்களின் பெயர், அவரது தொழில், சுய வருமானம், கோயிலின் பாரம்பரிய நடைமுறைகளின் ஞானம், அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றக் கூடியவரா? என்பது உள்ளிட்ட விவரங்களை நாளிதழ்களில் பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும். இந்த விவரங்களை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தெரிவிக்கும் விதமாக விளம்பரப் பலகையிலும் வைக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.கார்த்திகேயன் பதில்மனு தாக்கல் செய்தார். அதில், “இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில கோயில் அறங்காவலர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அவர்களது குடும்பம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது. மேலும், கோயில் அறங்காவலர் குறித்து குறிப்பிட்ட தகவல்களைப் பெற விரும்புகிறவர்கள் தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்டுப் பெறலாம்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஸ்ரீதர், கோயில் அறங்காவலர்களின் பெயரை வெளியிடுவது மட்டும் போதாது, கோயில் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தொடர்பு எண்ணையும் அறிவிக்க வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் அறங்காவலர்களின் பெயர், முகவரி, தொழில், உள்ளிட்ட விவரங்களுடன் தெரிவிக்க அதிகாரிகளின் பெயர்களை 8 வாரத்தில் வெளியிட அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகார் தெரிவிக்கும் வகையில் அறங்காவலர்களின் செல்போன் எண்களை வெளியிட உத்தரவிட்டுள்ளது.

Leave your comments here...