தேவகோட்டையில் காவல்துறை சார்பில் மனு குறைதீர்க்கும் முகாம் .!

தமிழகம்

தேவகோட்டையில் காவல்துறை சார்பில் மனு குறைதீர்க்கும் முகாம் .!

தேவகோட்டையில் காவல்துறை சார்பில் மனு குறைதீர்க்கும் முகாம் .!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தனியார் பள்ளி வளாகத்தில் காவல்துறை சார்பில் மனு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோகித்நாதன் உத்தரவின்பேரில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் சபாபதி தலைமையில் ஆய்வாளர்கள் அந்தோணி செல்லத்துரை, பேபிஉமா, ஜோதிபாசு முன்னிலையில் மனு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் 56 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் 12 மனுக்கள் தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் 19 மனுக்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 மனுக்கள் கல்லல் காவல் நிலையத்தில் 8 மனுக்கள் வேலாயுதம் காவல்நிலையத்தில் 7 மனுக்கள் திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் 4 மனுக்கள் மொத்தம் 56 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது முன்னதாக முகாமிற்கு வரும் மனுதாரர்கள் அனைவருக்கும் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்தி முக கவசம் அணிந்த பின்பு முகாமின் உள்ளே அனுமதித்தனர் சமூக இடைவெளி கடைபிடித்து மனு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

பொதுமக்கள் கூறியதாவது இம்முகாமில் மூலம் எங்கள் மனுக்கள் மீதான விசாரணையில் நாங்கள் உடனடி தீர்வு கண்டதால் இரு தரப்பினரும் மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் செல்கிறோம் என்றனர். மேலும் கணவன் மனைவி பிரச்சனைகள் தீர்வு காணப்பட்டு இரண்டு நபர்களும் சேர்ந்து வரும் பொழுது அவர்களின் குடும்பத்தார்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

Leave your comments here...