குவைத் நாட்டிலிருந்து பள்ளி மாணவர்களை தேடி வந்த பரிசு.!

தமிழகம்

குவைத் நாட்டிலிருந்து பள்ளி மாணவர்களை தேடி வந்த பரிசு.!

குவைத் நாட்டிலிருந்து பள்ளி மாணவர்களை தேடி வந்த பரிசு.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆன்லைன் வழியாக சதுரங்க பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் ஞான கிரேஸ் வளர்மதி தலைமையில் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஊரடங்கு நேரத்தில் கடந்த சில மாதங்களாக குவைத் நாட்டிலிருக்கும் செஸ் பயிற்சியாளர் வள்ளியம்மை சரவணன், தேவகோட்டை பள்ளி மாணவர்களுக்குப் ஆன்லைன் வழியாக செஸ் பயிற்சி அளித்தார். பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை குவைத் நாட்டிலிருந்து பயிற்சியாளர் பள்ளிக்கே அனுப்பி வைத்தார்.

பரிசுகள் வழங்கும் நிகழ்வு தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் ஞான கிரேஸ் வளர்மதி தலைமை தாங்கி பேசுகையில் , விளையாட்டு என்பது முக்கியமானது.ஊரடங்கு நேரத்தில் உங்களுக்கு சதுரங்கம் தொடர்பான பயிற்சி நல்ல முறையில் உதவியாக இருந்திருக்கும்.நீங்கள் பிற்காலத்தில் விளையாட்டு துறையில் உங்கள் கவனத்தை அதிகம் செலுத்துங்கள்.மிகப்பெரிய வெற்றிகளை எளிதாக அடையலாம் என்று பேசினார்.

சதுரங்க போர்ட் மற்றும் காயின்களை வட்டார கல்வி அலுவலர் மாணவர்களுக்கு பரிசாக வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Leave your comments here...