ராணுவ தளபதி நரவனே திடீர் லடாக் பயணம்..?

இந்தியாஉலகம்

ராணுவ தளபதி நரவனே திடீர் லடாக் பயணம்..?

ராணுவ தளபதி நரவனே திடீர் லடாக் பயணம்..?

காஷ்மீர் மாநிலம் லடாக் லே எல்லைப்பகுதியில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தன. அதைத்தொடர்ந்து இரு நாடு களுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. அமைதி ஏற்படுத்த ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், சீனப்படைகள் அவ்வப்போது எல்லைப்பகுதியில் வாலாட்டி வருகின்றன.

அமைதிப் பேச்சுகளின் போது படைகளை முழுவதும் விலக்கிக் கொள்வதாக ஒப்புக் கொண்ட சீனா, பிங்கர் 4 முதல் 8 வரையிலான மலைத் தொடரை தனது கட்டுப்பாட்டில் வைத்து படைகளை விலக்கிக் கொள்ள மறுத்து பிடிவாதம் காட்டி வந்தது.இந்நிலையில், இந்தியப் படையினர் பிங்கர் 4 பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பை முறியடித்து சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். சீனப் படையினர் முன்னேறி வருவதைத் தடுக்க பிங்கர் 2, பிங்கர் 3 மலைச் சிகரங்களில் இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

டெஸ்பாங் தவுலத் எனுமிடத்தில் சீனா அதிக அளவில் படைகளைக் குவித்திருப்பதால் அதனை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கிழக்கு லடாக் முதல் அருணாசலப் பிரதேசம் வரை எந்த வித அத்துமீறல்களுக்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய ராணுவம் தனது படைபலத்தை விரிவுபடுத்தியுள்ளது. இதனிடையே இந்தியா -சீனா ராணுவ உயரதிகாரிகளிடையே மூன்றாவது நாளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. தன்னிச்சையாக எல்லை வரையறையை மாற்றியமைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. இதனை சீனா ஏற்க மறுப்பதால் நேற்றைய பேச்சுவார்த்தையும் உடன்பாடு இல்லாமல் முடிவடைந்தது.

இந்த நிலையில் ராணுவத் தளபதி எம்.எம் நரவானே திடீர் லடாக் பயணம் மேற்கொண்டு உள்ளார்.கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் ஆய்வு நடத்த நரவானே திட்டம் 2 நாட்கள் லடாக்கில் நரவானே பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் கடந்த 29 மற்றும் 30 தேதிகளில் ஏற்பட்ட சூழலை அடுத்து எல்லைப்பகுதிகளில் நிலைமையை ஆய்வு செய்கிறார்.

Leave your comments here...